Posts

Showing posts from July, 2017

சுவாரசிய சினிமா - Sakhavu (Malayalam)

Image
ஒவ்வொரு திரைப்படமும் நிகழ்காலத்தின் பதிவு .சமகால அரசியல் ,மக்களின் வாழ்வியல் ,சமுக மாற்றம் ,இப்படி பல தன்மைகளை தன்னை அறியாமல் பதிவு செய்யும் கருவி  சினிமா .காலம் எத்தனை வேகமாக ஓடினாலும் அதன் ஓட்டத்துக்கு ஈடுக்கொடுத்து திரைத்துறையும் இயங்கிக் கொண்டே இருக்கிறது . மலையாள சினிமா எப்பொழுதும் யதார்த்த நிலையில் இருந்து தன்னை மாற்றிக்  கொண்டதே இல்லை .எத்தனை தொழில்நுட்பம் வளர்ந்தாலும் மண் சார்ந்தும் அவர்களின் வாழ்வியல் சார்ந்துமே அங்கு திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன .அடுத்து கருத்து சுதந்திரம் தமிழகத்தை ஒப்பிடும் பொழுது பலப்படி முன்னே உள்ளது . Sakahavu (தோழர் ) படம் முன் எப்பொழுது வெளிவந்து இருந்தாலும் இத்தனை பெரிய தாக்கத்தை ஏற்ப்படுத்தி இருக்குமா தெரியவில்லை .ஆனால் இப்பொழுது உள்ள அரசியல் சூழலில் மிகவும் முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது .குறிப்பாக கேரளாவில் ஆர் எஸ் எஸ் தன் கரத்தை வலுப்படுத்த முயலும் இவ்வேளையில் இத்திரைப்படம் தோழர்களுக்கு புதிய புத்துணர்வை தந்து இருக்கும் . உண்மையில் திரைப்படத்தின் தாக்கம் என்பது உங்களை உணர்வுக்கொள்ள செய்ய வேண்டும் .அத்தைகைய உணர்வு இந்த திரைப்படத்

படத்தில் பாடல் எப்பொழுது வெற்றி பெறுகிறது ?

Image
தமிழ் சினிமாவையும் பாடல்களையும் பிரித்துப்பார்க்க பார்க்க முடியாது .உண்மையில் மக்கள் பாடல்கள் மட்டுமே கேட்பதற்கு திரையரங்கிற்க்கு வந்த காலமும் உண்டு .அந்த அளவிற்கு மக்கள் வாழ்வில் பாடல்கள்  பின்னிபினைந்துள்ளது .ஆனால் பாடல் ஏன் படத்தில் வரவேண்டும் ?பாடலுக்கும் படத்திற்கும் என்ன தொடர்ப்பு உண்டு ?திரைப்பட காட்சிகள் கூட ஓரளவிற்கு நாம் வாழ்வோடு ஒத்துப் போக கூடியது தான் .ஆனால் பாடல்கள் ?நம் நிஜத்தில் அவ்வாறு பாடுகிறோமா என்ன ?ஏன் பாடல் வரவேண்டும் இதை தெரிந்துக்கொள்ள நாம் சற்று பின்னோக்கி செல்ல வேண்டும் .நாடகத்தில் பாடியதால் அதை தழுவி திரைப்படத்திலும் பாடல்கள் வெளிவந்தது .அவ்வாறு வெளிவந்த பாடல்கள் பெரும்பாலும் கதையை மையப்படுத்தியே வந்தது .நீளமான வசனங்கள் பேச வேண்டிய இடத்தில் பாடல்கள் அந்த இடத்தை  நிறைவு செய்தது .உண்மையில் தமிழ் சினிமாவில் பாடல்கள் வந்த காரணம் இது தான் . மற்ற மாநில மொழி படங்களிலும் பாடல்கள் வருவதற்கும்  தமிழ் சினிமா தான் பெரிய காரணம் .காரணம் இந்திய சினிமாவின் ஆரம்பகாலம் சென்னையில் தான் தொடங்கியது .அதனால் இங்கு எடுக்கப்படும் படத்தின் தாக்கம் இந்தியாவெங்கும் எதிர

திரைக்கதை எளிது

Image
இணையம் வழியாக நம்மிடம்  திரைக்கதை பயிலும் நண்பர் ஒருவர் கேட்ட கேள்வி , கதையின் முடிவை முன்னரே அறிந்து வைப்பது எதற்காக ?நாம் ஏன் கதையை அதன் போக்கில் விட கூடாது ?புது புது சிந்தனை கிடைக்கும் அல்லவா ?அதை கதையில் கொண்டுவருவது நல்லது தானே என்று . உண்மையில் நாம் ஒரு கதையை தொடங்கும்போது முடிவு குறித்து எல்லாம் சிந்திப்பது இல்லை .கதை நம்மை எங்கு  இட்டு செல்கிறதோ அங்கே நாமும் செல்வோம் .நீங்கள் கதையை முடிக்கும் பொழுது நம் எதிரே நான்குக்கும் அதிகமான climax இருக்கும் .அதை தேர்ந்தெடுப்பது உண்மையில் கடினம் .காரணம் நீங்கள் climax காட்சியை மாற்றினால் முதல் காட்சியை மாற்ற நேரிடும் . அதனால் முதலில் climax குறித்து சிந்தித்த பின் எழுத தொடங்குங்கள் .முடிவு இது தான் என தெரிந்த பின் எழுதுவது மிக சுலபமாக இருக்கும் .கதையின் கிளை பிரிவுகள் தானாக விரிய தொடங்கும் .பின்னோக்கி செல்வதால் நீங்கள் நினைத்த மாதிரி எல்லாம் எழுத முடியாது .கதை ஒரு கட்டுக்குள் அடங்கி விடும் . சுப்ரமணியபுரம் திரைப்படத்தை எடுத்துக்கொள்ளுங்கள் .முதல் காட்சி கஞ்சா கருப்புவை கொலை செய்வதில் இருந்து தொடங்கும் .ஏன் கொலை நடந்தது என்று தெ

BIG BOSS - உளவியல் தாக்குதல்

Image
ஓவியாவை நேற்று மக்கள் கொண்டாடி தீர்த்து விட்டனர் .இந்திய அளவில் trending -ல் நேற்று ஓவியாவின் பெயர் பிரபலமானது .ஒரு புறம் சமுக ஆர்வலர்கள் இது கலாச்சார சீரழிவு என்று நிகழ்ச்சியை தவறாமல் பார்த்துக்கொண்டே எதிர்த்து வருகின்றனர் .மறுபுறம் பித்துபிடித்தவர்கள் போல் நிகழ்ச்சியை வெறித்தனமாக பார்க்கும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது . காட்சி ஊடகத்தின் வலிமை இது தான் .நேரடியாக உங்கள் உணர்வுகளுடன் விளையாடும் வல்லமை காட்சி ஊடகத்துக்கு உள்ளது .நீங்கள் என்ன சிந்திக்க வேண்டும் ,எவ்வாறு உணர்வை வெளிப்படுத்த வேண்டும் அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தி ,ஆற்றல் அனைத்தும் இந்த ஊடகத்துக்கு உண்டு .அதனால் தான் பொதுவெளியில் திரையிடும் படங்களுக்கு தணிக்கை வைத்து அரசு கண்காணிக்கிறது . ஆனால் தொலைக்காட்சிகளுக்கு அந்த கட்டுப்பாடு கிடையாது .அதிகபட்சமாக IBF -ல் online வழியாக புகார் அனுப்பலாம் .இதை தவிர்த்து தொலைக்காட்சியை கட்டுப்படுத்த இந்தியாவில் வேறு வழி கிடையாது .அத்தனை சுதந்திரம் உள்ளது .அரசை குறித்து விமர்சிக்காமல் என்ன வேண்டுமானாலும் செய்துக் கொள்ளலாம் .மீறினால் தொலைக்காட்சி அலுவலகத்த

சுவாரசிய சினிமா - UNBROKEN

Image
உண்மையில் நம் வாழ்வில் திரைப்படங்களின் பங்கு அளப்பறியது .ஒரு வேலை இந்த ஒரு ஊடகம் மட்டும் இல்லாமல் போய் இருந்தால் மனித வாழ்வின் மேம்பாடு குறித்து சிந்திக்கவே முடியாது .பல படங்கள் தரம் இல்லாமல் எடுப்பதால் ஒட்டுமொத்த திரைப்படங்களை நாம் குறை சொல்ல முடியாது .சில படங்கள் உண்மையில் உங்கள் வாழ்வை புரட்டிப் போட கூடிய வல்லமை பெற்றவை . உங்கள் உடல் ,உள்ளம் அனைத்தும் சோர்ந்து போய் வாழ்வே கேள்வி குறியாய் உள்ளதா ?துக்கம் மட்டுமே உங்கள் வாழ்வை சூழ்ந்து உள்ளது போல் உணர்கிறீர்களா ?மகிழ்ச்சி என்றுமே உங்கள் வாழ்வில் எட்டி பார்க்கவே பார்க்காது என்று முடிவு எடுத்து உடைந்து போய் விட்டீர்களா ? ஆம் என்றால் உங்களுக்கு தான் இந்த படம் . உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த படம் பிரபல நடிகை Angelina Jolie யால் இயக்கப்பட்டது .இரண்டாம் உலக போரில் ஜப்பான் மீது குண்டு வீச செல்லும் விமானம் இயந்திர கோளாறால் கடலில் விழுந்து நொறுங்குகிறது .கடலில் 47 நாட்கள் உயிர் பிழைத்து பின் ஜப்பான் இராணுவத்தால் கைது செய்யப்படும் நாயகனுக்கு  இறுதியில் என்ன ஆகிறது என்பதே கதை . ஒரு மனிதன் உண்மையில் நொறுங்கி போய் இர

Up- Dated ஆக இருங்கள் .

Image
மக்கள் ரசனை நொடிக்கு நொடி மாறிக்கொண்டே வரும் .அதற்க்கு ஏற்றார்போல் திரைப்படமும் மக்களின் ரசனை அறிந்து எடுக்க முற்ப்படுகின்றனர்.ஆனால் பெரும்பாலும் இது தோல்வியில் முடிவதற்கு காரணம் இங்கே வியாபாரம்  படத்தின் தரத்தைக் குறித்து கவலைப்படாமல் நாயகனின் முந்தைய படத்தின் வெற்றி ,இயக்குனரின் முந்தைய படத்தின் வெற்றி இது இல்லாமல் நாயகன் இயக்குனரின் கூட்டணி இப்படி பல பிரபலமான(!) யுக்திகளை இங்கே கையாளுகிறார்கள் . உண்மையில் மக்கள் தெரிந்த நாயகனின் படத்துக்கு முக்கியத்துவம் தருகிறார்கள் தான்.ஆனால் படத்தின் தரம் என்பது உள்ளே சென்ற பின் இளிக்க தொடங்கி விடுகிறது.இதற்க்கு பெரிய காரணம் திரைக்கதையின் மேல் அக்கறை செலுத்தாமல் வெறும் நல்ல சீன்கள் மட்டும் படத்தில் இருந்தால் போதும் என நினைப்பது படங்கள் தோற்ப்பதற்கு பெரும் காரணமாக அமைகின்றன . அடுத்து கதைக் குறித்து விவாதிக்கும் பொழுது எல்லாம் இங்கே ஒரே வித Template -ஐ கடைப்பிடிக்கிறார்கள் .அது சமிபத்தில் எந்த படம் வெற்றி பெற்றதோ அதே விதமான பாணியை பின்பற்ற முயல்கிறார்கள் .ஒரு படைப்பு இங்கயே தோற்று விட்டது .தனி திறன் தான் ஒரு படைப்புக்கு உரிய அந்தஸ்த்தை

சுவாரசிய சினிமா - Don't Breathe

Image
கிரைம் -த்ரில்லர் படங்கள் வரிசையாக வெளிவந்து கொண்டு இருந்தாலும் சில படங்கள் நம்மால் மறக்க முடியாது .தமிழில் ஊமை விழிகள் பெரும் சலனத்தை ஏற்படுத்தியது .காரணம் புதிய களம் காண்பிக்கும் பொழுது ரசிகர்களின் அட்ரலின் அதிகமாக சுரக்க தொடங்கி விடும் .இந்த curiosity - ஐ நீங்கள் ஏற்ப்படுத்தி விட்டால் போதும் .கண் எடுக்காமல் பார்க்க தொடங்கி விடுவார்கள் . புதிய சிந்தனையை மக்கள் அனைவரும் வரவேற்க தயாராகவே உள்ளனர் .கடந்த வருடம் வெளி வந்த Don't Breathe குறித்து நிறைய எழுதி தள்ளி விட்டார்கள் .இனி எழுத எதுவும் இல்லை ஆனால் இந்த படத்தில் இருந்து சில பாடங்களை நாம் கற்றுக் கொள்ள வேண்டும் . முதல் விஷயம் படத்தின் ஆரம்ப காட்சி Aerial Shot -ல் இருந்து தொடங்கி இருப்பார்கள் .தமிழில்  பெரும்பாலும் Location Establishing மட்டுமே அந்த வகை காட்சிகளை எடுத்து இருப்போம் .ஆனால் கதாப்பாத்திர அறிமுகமே இந்த காட்சியில் இருந்து தொடங்கி இருப்பதால் ஒரு வித ஈர்ப்பை ஆரம்பித்திலேயே நாம் பெற்று விடுகிறோம் .இது தான் மேற்கத்திய பாணி . முதல் காட்சியில் இருந்தே ரசிகர்களின்  கவனத்தை  ஈர்க்க தொடங்கி விடுவார்கள் .அப்படி கதை

சுவாரசிய சினிமா - Jibeuro (Korean)

Image
எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் அந்த துறையை பற்றிய  அடிப்படை அறிவு இல்லாமல் நம்மால் எதுவும்  புரிந்துக் கொள்ள முடியாது .ஆனால் பாமரனும் படித்தவனும் ஒரே அளவு கோளில் புரிந்துக் கொள்ள கூடிய காட்சி ஊடகம் சினிமா மட்டும் தான் . மக்கள் தங்களை படத்தின்  ஒரு அங்கமாக கருதியே திரையரங்கினுள் நுழைக்கின்றனர் .ஒரு குறுகிய பயணம் .அது சந்தோஷமா துக்கமோ .அதனுள் மக்களும் பயணிக்க எத்தனிக்கிறார்கள் .தங்கள் ஆன்மாவை திரையோடு கரைத்துக் கொள்ள தயார் நிலையிலேயே ஒவ்வொரு தனி மனிதனும் உள்ளே நுழைகிறான் . கதை யாரை பற்றியது வேண்டுமானாலும் இருக்கட்டும் .நான் அவர்களோடு பயணிக்க தயார் .ஆனால் அழைத்து செல்ல திரையும் தயாராக இருக்க வேண்டும் . விளாடிமிர் லெனின் சொல்கிறார் "உள்ள அத்தனை கலைகளை விட நமக்கு மிகவும் முக்கியமானது சினிமா "என்று  .நூறு மேடை பேச்சுகளில் நிகழ்த்த முடியாத சாதனையை ஒரே ஒரு  சினிமா செய்து முடித்து விடும் .காரணம் சினிமாவும் சமூகமும் ஒன்றை ஒன்று பார்த்து வளர்கிறது .இரண்டில் ஒன்று தவறு செய்தாலும் பாதிப்பு சமூகத்துக்கே . இது தான் சினிமாவின் வலிமை ..சினிமாவை பார்த்து சமுகம் வளர்கிறது .கற்கி

வெற்றிப் பெற்ற படங்கள் பல நிராகரிக்கப்பட்டவையே .

Image
புகழ்ப் பெற்ற பல படங்களின் திரைக்கதை தயாரிப்பாளர்களால் நிராகரிக்கப்பட்டவையே .இதற்க்கு இரண்டு காரணங்கள் உண்டு ஒன்று அதற்கு முன் வந்த வெற்றித் திரைப்படங்கள் போலவே கதையமைப்பை எதிர்ப்பார்ப்பார்கள் .இரண்டாவது தன் எதிர்ப்பார்ப்பை கதையின் மேல் திணிக்கப் பார்ப்பார்கள் . ஒரு படைப்பாளியின்  உலகம் தயாரிப்பாளரின் உலகத்தில் இருந்து முற்றும் மாறுப்பட்டவை.படைப்பாளியின்  சிந்தனை எங்கே சுற்றினாலும் அவனின் படைப்பு முழுவதும் சமுகத்தை ஒட்டியே அமையும் .சமுகத்தின் தலையாய பிரச்சனை குறித்தே அவனின் சிந்தனை ஓட்டம் இருக்கும் . கோபம் ,அழுகை ,சிரிப்பு ,சந்தோசம் அனைத்தையும் அவன் வாழும் சமூகத்திடம் இருந்தே எடுத்துக் கையாள்வான் .பெரும்பான்மை  சமுகத்தின் நாடித்துடிப்பு அவன் அறிந்து அதனை கதையினுள் கொண்டு வரவே முனைவான் .இதனை elite சமுகத்தில் வாழும் தயாரிப்பாளர்கள் அறிந்துக் கொள்ள வாய்ப்பு  இல்லை . ஒரு சாமானியனின் போராட்டமே மக்கள் தங்களின் வெற்றியாக கருதுகிறார்கள் .அது இயேசு காலம் தொடங்கி காந்தி காலம் வரை எளிய மனிதனின் வெற்றியே சமுகத்தின் வெற்றியாக அடையாளம் கொள்ளப்படுகிறது .ஏனென்றால் பெரும்பான்மை மக்கள் இங்கே

சுவாரசிய சினிமா - THE GREAT DICTATOR

Image
குறித்து வைத்துக் கொள்ளுங்கள் இன்னும் நூறாண்டு கழித்தும் வரலாறு இருவர் பற்றி பேசிக் கொண்டே இருக்கும் ஒன்று  அடால்ப் ஹிட்லர் மற்றொருவர் சார்லி சாப்ளின் .இருவருமே ஒரே வருடத்தில் ஒரே மாதத்தில் பிறந்தவர்கள் .இருவருமே உலகம் அறிந்தவர்கள் .ஹிட்லர் அழித்தார் .சாப்ளின் படைத்தார் . அமெரிக்கா ,பிரிட்டன் உட்பட வல்லாதிக்க நாடுகளே ஹிட்லரை கண்டு அஞ்சி கொண்டு இருந்த நேரம் .1940 அக்டோபர் 15 முதல் காட்சி The Great Dictator -ஐ பார்த்தவர்கள் வாய் அடைத்து போயினர் .ஹிட்லரை நூறு முறை தூக்கில் தொங்க விட்டு இருந்தாலும் அவ்வளவு வேதனைப்பட்டு இருக்க மாட்டார் . ஒரு மாபெரும் பிம்பத்தை ,நாஜி படைத்தலைவனை ,உலகத்தை தன் ராணுவத்தால் மிரள வைத்த ஹிட்லரை இத்தனை தைரியமாக பகடி செய்யும் துணிச்சல் ஒரு காமெடி நடிகருக்கு எப்படி வந்தது ?ஆம் அத்தனை காலமும் சாப்ளின் காமெடி தான் செய்துக் கொண்டு இருந்தார் .வசனமே இல்லாமல் pantomime வகை நடிப்பை வெளிப்படுத்தி கொண்டு இருந்தார் . ஹிட்லரை கொடுரனாக காட்டி இருந்தால் கூட நாஜிகள் மகிழ்ச்சிக் கொண்டு இருப்பார்கள் .மக்கள்  ஹிட்லர் மேல் வைத்த இருந்த அதி பயங்கர  பிம்பத்தை தரையில் போட்டு

சுவாரசிய சினிமா - The Song Of Sparrows

Image
ஐரோப்பாவின் புகழ்ப் பெற்ற இயக்குனர் ,திரைக்கதை ஆசிரியர் Bela Balaz தன்னுடைய  The Theory of the film  நூலில் இப்படி குறிப்பிடுகிறார் . "ஏராளமான நடிகர்களையோ ,பிரம்மாண்டமான அரங்கத்தையோ ,பெரிய கூட்டத்தையோ வைத்து எடுப்பதின் மூலம் படத்தின் பிரம்மாண்ட தன்மையை உருவாக்க முடியாது ,மாறாக படத்தின் கருத்துப் பொருள் அல்லது கதாநாயகனின் தனித்தன்மை மூலமாகத்தான் படத்தின் பிரம்மாண்ட தன்மையை உருவாக்க முடியும் ". அவர் கூறிய அத்தனையையும் ஈரான் சினிமா பின்பற்றுகிறது .தொழில் முறை நடிகர்கள் கிடையாது .போதுமான நிதி வசதி கிடையாது .எடுத்த படங்களை திரையிட திரையரங்குகள் கிடையாது .இருக்கும் பொருளை வைத்து சிறந்ததை எடுக்கக் கற்று கொண்டனர் . உலகம் கொண்டாடும் படைப்புகளை எடுத்தக் கொண்டே வருகின்றனர் .மொழி கடந்து ,இனம் கடந்து ஈரானிய சினிமா தனக்கான பாதையை உருவாக்கி கொண்டுள்ளது .பொருளாதார ரீதியாக தத்தளித்தாலும் தங்களால் இயன்றதை பதிவு செய்துக் கொண்டே வருகின்றனர் . இந்த படமும் உங்களை நிச்சயம் ஏமாற்றாது .சூழ்நிலைகள் தான் மனிதனின் உணர்வை தூண்டும் .அந்த உணர்வுகளை கொஞ்சமும் உண்மை குறையாமல் படமாக்குவது என்பது

சுவாரசிய சினிமா - Men Of Honor (English )

Image
அமெரிக்காவை என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள் .தன் சொந்த நாட்டின் கருத்து சுதந்திரத்தில் எப்பொழுதும் மூக்கை நுழைத்தது இல்லை .இன்றும் அந்த தேசம் வளர்ந்துக் கொண்டே இருப்பதற்கு காரணம் தவறுகளை திருத்தி கொள்கிறது புதிய சிந்தனைகளை உள்வாங்கிக்கொண்டு தன் கட்டமைப்பை மேலும் உறுதிப் படுத்திக் கொள்கிறது .வெளியுறவு கொள்கைகள் எப்படியோ ஆனால் சொந்த நாட்டு மக்களின் நலன் சார்ந்து சிந்திப்பதில் அவர்களுக்கு நிகர் அவர்கள் தான் . இந்தியாவின் சாதிக் கொடுமையை விட ஒரு படி மேலான கொடுமையை அங்கே கருப்பர்கள் அனுபவித்தார்கள் .கறுப்பர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது ,அடிப்படை உரிமை அனைத்தையும் இழந்து மிக பெரிய அடிமை சமுகம் வளர்ந்துக் கொண்டு இருந்தது . ஒரு கட்டத்தில் அமெரிக்கர்களே இதை உணர ஆரம்பித்தார்கள் .சக மனிதனை மதிக்கும் பண்பு மக்களிடம் மேலோங்கியது .நம் நாட்டு சாதி தலைவர்கள் போல அல்லாமல் இன விடுதலை என்பது தேசத்தின் வளர்ச்சிக்கான விடுதலையாக பார்த்ததின் விளைவு இன்று நாம் அண்ணாந்து பார்க்கும் தேசமாய் அமெரிக்கா உள்ளது . Men of Honor திரைப்படமும் ஒரு கருப்பரை பற்றி தான் .வெள்ளையர்கள் நிறைந்த இடத்தில் எப்படி ஒரு