Posts

Showing posts from June, 2017

மிகை நடிப்பு vs நிஜ நடிப்பு

Image
நண்பர் ஒருவர் அலைபேசியில் அழைத்து இருந்தார் .பேசிக்கொண்டு இருக்கையில் நாடகம் தான் திரைப்படத்தை விட உயர்ந்தது என்றும் ,உண்மையான நடிகன் நாடகத்தின் வாயிலாக தான் முழுமை பெறுவான் என்று வாதம் புரிந்தார் .சினிமா நடிப்பின் ஆன்மாவை அழித்து விட்டதாகவும் கடுமையான விவாதம் புரிந்தார் .எதிர் விவாதம் புரிய புறசூழல் அனுமதிக்கவில்லை . ஆனால் உண்மையில் இது மிக முக்கிய கேள்வி .நாடக நடிப்புக்கும் ,திரை நடிப்புக்கும் உள்ள வேறுப்பாடு ,வளர்ந்த விதம் ,மக்கள் எந்த கண்ணோட்டத்தில் இதை பிரித்திப் பார்க்க தொடங்கினர் ,என்பதை விளக்க வேண்டிய கட்டாயம் உள்ளது . ஐரோப்பாவில் நாடகம் தொடங்கப்பட்ட காலம் முதல் அது நில பிரபுத்துவ கைப்பிடியில் இருந்தது .உழைக்கும் மக்கள் நாடகத்திற்கு செல்லும் அளவிற்கு பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை .ஆகையால் நாடகம் வெகுஜன ஊடமாக வளரவில்லை .பணக்காரர்கள் பொழுதுபோக்க தங்கள் அந்தஸ்த்தை வெளிப்படுத்த நாடகம் அவர்களுக்கு உதவியது . வெகுஜன மக்களும் நாடகம் பார்க்க தொடங்கிய காலத்தில் அவர்களால் ஒன்ற முடியவில்லை .காரணம் பல நேரத்தில் அரங்கம் முக்கிய பிரமுகர்களுக்காக காத்துக் இருந்தது .சில சமயம் அவர்கள

உங்கள் முதல் படம் வெற்றி பெறுமா ?

Image
ஒரு காலத்தில் காமெராவின் VIEWFINDER -ஐ பார்ப்பதே அபூர்வமாக இருந்தது.ஒளிப்பதிவு செய்வது என்பது ஏவுகணை சோதனையை விட கஷ்டமான காரியமாக பார்க்கப்பட்ட காலமும் இருந்தது .உண்மையில் கஷ்டமும் கூட .இப்பொழுது  டிஜிட்டலில் எடுப்பது போல் அழித்து அழித்து எல்லாம் முடியாது .Aperture கூடினாலும் சிக்கல் ,குறைந்தாலும் சிக்கல் .கிடைக்கும் ஒளிக்கு ஏற்ப சரியாக இயக்க வேண்டும் . பட்ஜெட்டில் நாற்பது சதவிகிதம் film முழுங்கி விடும் .அதனால் புதுமுகங்களை நடிக்க வைக்க தயங்கி நாடகங்களில் தேர்ச்சிப் பெற்ற நடிகர்களையே இயக்குனர்கள்  நடிக்க வைத்தனர் .உண்மையில் வசனத்தை ஒப்பிக்க வைத்தனர் . இன்று அறிவியலின் அசூர வளர்ச்சியால் சினிமா என்னும் அற்புத கலை வெகுஜன மக்களிடமும் சேர்ந்துள்ளது .யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் என்ற நிலை உள்ளது .ஆனால் இதை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்கிறோமா என்றால் உண்மையில் இல்லை . முதல் தவறு சரியான திட்டமிடல் இல்லாமல் ஷூட்டிங் ஸ்பாட் செல்வது .நீங்கள் எவ்வளவு திறமையான நபராக இருந்தாலும் ஸ்பாட்டில் திட்டமிடாத எதையும் செய்ய முடியாது .அங்கே அனைவரும் உங்கள் எண்ண ஓட்டத்தோடு நிச்சயம் ஒத

சுவாரசிய சினிமா - SHUTTER ( Malayalam)

Image
உலகம் தோன்றி இத்தனை ஆயிர கோடி வருடங்களில் மனித இனம்  மட்டும் தான்  புறசூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்து தப்பி பிழைத்து  இந்த உலகை ஆள்கிறது .தப்பி பிழைப்பது என்பது, பிரச்சனைகளில் இருந்து தப்பிப்பது அல்லது விடுப்படுவது .இதை இரண்டையும் மனிதன் சிறப்பாக செய்வான் . உண்மையில் சந்தோசம் என்பது கஷ்டத்தில் இருந்து விடுப்படுவது தான்.தினம் ஒரு பிரச்னையை கடந்து தான் நாம் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம் .அவரவர் தகுதிக்கு ஏற்ப பிரச்சனை இருந்துக் கொண்டே தான் இருக்கிறது .ஒன்று அதை எதிர்க்கொள்ள வேண்டும் அல்லது ஒளிந்துக் கொள்ள வேண்டும் . திரைக்கதை அமைப்புக்கான அடிப்படை சித்தாந்தமே இது தான் .கதையில் பிரச்சனை இருக்க வேண்டும் .அதை நாயகன் எதிர்க்கொள்ள வேண்டும் ,அதற்க்கு தீர்வு கிடைக்க வேண்டும் .அந்த தீர்வு மகிழ்வானதாகவும் இருக்கலாம் ,துயர் உடையதாகவும் இருக்கலாம் .ஆனால் கட்டாயம் தீர்வு இருந்தே தீரும் . மலையாள சினிமாக்களின் தரம் குறித்து விமர்சனம் செய்யாதவர்களே கிடையாது .அவர்களின் கதை மண்ணின் மாந்தர்களை குறித்தே இருக்கும் . வாழ்வியல் உணர்வுகளை சரியான அளவீடுகளில் பிரதிபலிப்பார்கள் .அதே சமயம் திரைக்கதை அமை

திரையரங்கம் கொண்டாட்டத்தின் குறியீடு .

Image
ஒரு ஆய்வின் முடிவு இப்படி சொல்கிறது . வெறும் ஒலியாக  கேட்கும் விஷயங்கள்  மூன்று நாட்களுக்கு பிறகு உங்களால் 10% தான் நினைவு கூற முடியும் .அதுவே கண்களால் பார்த்த விஷயத்தை 35% நினைவு கூற முடியும் .ஆனால் ஒலி ஒளியுடன் சேர்த்து பார்க்கும் விஷயத்தை உங்களால் மூன்று நாட்களுக்கு பிறகும் 65% நினைவு கூற முடியும் . சினிமாவின் வலிமை அது தான் . உள்ளம் ஊடுருவி உங்களை திரையோடு பயணிக்க செய்யும் மாயம் .திரைப்படங்களுக்கே உண்டு .உடல் பொருள் ஆவி அனைத்தையும் ஒப்புக்கொடுத்து நாம் அனுபவிக்கும் பேரானந்தம் சினிமா . இப்படி நாம் ஒப்புக்கொடுக்க அங்கே என்ன இருக்கிறது ? புதிய உலகம் . நீங்கள் காணாத அல்லது காண தவறிய மனிதர்கள்.ரத்தமும் சதையுமாக உணர்வு பொங்க அவர்களின் கதையில் நீங்கள் பயணம் செய்வீர்கள் . காதல் ,பாசம் ,சகோதர அன்பு ,தேசப்பற்று ,தோல்வி ,வெற்றி என திரையில் நாம் திளைப்போம் .அந்த உணர்வு தரும் சிலிர்ப்புகே நாம் திரையரங்கம் செல்கிறோம் .சரியாக பரிமாறப்பட்டால் உண்ட திருப்தியுடன் நாம் வெளியேறுகிறோம் .இல்லையென்றால் படத்தை குறித்து அவநம்பிக்கையுடன் வெளியேறுகிறோம் . இந்த அவநம்பிக்கை ஏற்ப்படுவதற்கான

சுவாரசிய சினிமா - SULLY

Image
எத்தனை சிறந்த கதையாக இருந்தாலும் அதற்க்கு திரைவடிவம் கொடுக்க திரைக்கதை அத்தியவசியம் .அதுவும் Biography Genre படம் எடுக்க வேண்டுமென்றால் அதிக மெனக்கெடல் வேண்டும் .நடந்த சம்பவத்தை அப்படியே எடுக்க முடியாது . நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் இலக்கிய மொழியிலிருந்து திரை மொழி முற்றிலும் வேறானது .காகிதத்தில் நாம் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் ,அதை காட்சிப்படுத்த முடியாது .திரைக்கதை தான் உங்களை காப்பாற்றும் . இந்திய சினிமாவில் எடுத்த அத்தனை Biography Genre எடுத்துக்கொள்ளுங்கள்.நம்மால் எத்தனை சினிமாவை நினைவுக் கூற முடியும் .சமீபத்தில் வெளி வந்த Dhoni ,Sachin திரைப்படத்தை நம்மால் எத்தனை முறை பார்க்க முடியும் ?காரணம் நமக்கு தெரிந்த கதையை பார்க்கும் பொழுது தானாக prejudge  செய்து விடுவோம் . SULLY அமெரிக்கா மட்டும் அல்ல உலகம் முழுக்க அறிந்த கதையே .ஹட்சன் நதியில் 155 பயணிகளுடன் தரை இறக்கி அனைத்து பயணிகளின் உயிரையும் காப்பாற்றிய    Capt.Chesle "Sully" Sullenberger எழுதிய  Highest Duty: My Search for What Really Matters புத்தகத்தை அடிப்படையாக கொண்டு எடுக்க பட்ட திரைப்படம் .

சுவாரசிய சினிமா - BARAN

Image
மனித வாழ்வு போராட்டத்திற்கு உட்பட்டது .அனைவரும் ஏதாவது ஒரு தேவையை நோக்கி போராடி கொண்டே இருப்பார்கள் .ஆனால் பொதுவான போராட்டமாக இதுவரை மனித குலம் சந்தித்து வருவது வாழ்வதற்க்கான போராட்டம் தான்  .உயிருடன் இருக்க உணவு வேண்டும் .உணவு கிடைக்க பணம் தேவை .வேலை செய்யாமல் பணம் கிடைக்க வாய்ப்பு கிடையாது .அதனால் எந்த வேலையாவது செய்து இந்த உலகில் தன்மானத்துடன் உயிர் வாழ மனித இனம் தொடர்ச்சியாக பாடுபட்டு கொண்டு இருக்கிறது . ஈரானிய சினிமா எப்பொழுதும் மனித வாழ்வை குறித்தே எடுக்கப்படுகிறது. ஒரு நாட்டை குறித்து நாம் தெரிந்து கொள்ள பெரிதும் உதவுவது அந்த நாட்டின் இலக்கியம் தான் .பாமர மக்கள் இலக்கியம் பழக வாய்ப்பு இல்லை ஆதலால் சினிமா தான் ஒரு நாட்டின் பண்பாட்டை குறித்தும், கலாச்சாரத்தை குறித்தும் பிரதிபலிக்கும்  கண்ணாடியாக இருக்கிறது .அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட நாடு ஈரான் . நம் சினிமா போல் கொண்டாட்ட சினிமா அங்கு எடுப்பது இல்லை.தொடர்ந்து நடந்த போரின் தாக்கம் .மத கட்டுப்பாடு ,பொருளாதார நெருக்கடி ,இதையும் தாண்டி தரமான திரைப்படம் எடுக்க முடிகிறது என்றால் சினிமாவை அவர்கள் ஆழமாக நேசிப்பது தான் காரணம் .

சுவாரசிய சினிமா - MINE

Image
அமெரிக்காவை இதுவரை தூக்கிப் பிடித்து கொண்டு இருப்பது உலகெங்கும் வெளியாகும் அமெரிக்காவின் திரைப்படங்கள் தான் .காட்சி ஊடகத்தின் வலிமை அது .உலகம் அழிய போகிறதா அமெரிக்கா தான்  காப்பற்றும் .அடுத்த நாட்டில் பிரச்சனையா பஞ்சாயத்து பண்ண இராணுவத்தோடு கிளம்பி  விடும் . ஒரு நாடு தனக்கு வேண்டுமென்றால் கொஞ்சமும் கூச்சப்படாமல், அந்த நாட்டில் அணு ஆயுதம் இருக்கிறது என்று அடுத்த நாளே போர் தொடுக்க கிளம்பி விடும் .அரசியலாக பார்த்தால் இது அநாகரீகம் .ஆனால் அவர்கள் எடுக்கும் திரைப்படங்களை பார்த்தால் இந்த உலகை காக்க வந்த தெய்வ தூதுவர்கள் போன்று காட்சிப் படுத்தி இருப்பார்கள் . உண்மையில் திரைப்படங்களின் பலமே நம்மை ஏமாற்றி நம்ப வைப்பது தான் .அப்படி ஒரு வேலை நாம் நம்பி விட்டால் அந்த படம் நிச்சயம் வெற்றிபடமாக இருக்கும் . நாம் முன்னர் சொன்னது போல கதாப்பாத்திரத்தை வலிமையாக்குங்கள் கதை மிக எளிமையாகிவிடும் .நாம்  உணர்வும் உணர்ச்சியும் நிறைந்தவர்கள் ,நம்மை அறியாமல் நாம் தினமும் பல வித உணர்சிகளை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறோம் .திரையில் ACT செய்வதற்கு நாம் REACT செய்ய வேண்டும் .அப்பொழுது தான் அந்த சம்பவம் ம

சுவாரசிய சினிமா - The Shawshank Redemption

Image
இந்த சமூக கட்டமைப்பு மனிதர்களை ஏதாவது ஒரு விதத்தில்  அச்சமூட்டி நமக்குள் இருக்கும் காட்டுமிராண்டிதனத்தை அடக்கி வைக்க தொடர்ந்து முயற்சி செய்கிறது .உண்மையில் எப்பொழுது சட்டம் மனிதனை கட்டுப்படுத்தியதோ ,அப்பொழுதில் இருந்து மனித நாகரீகம் வளர தொடங்கியது . வரலாறு எழுத தொடங்கிய காலம் முதல் நம் காதுகளில் தவறாது ஒலிக்கும் வார்த்தை சிறை .சொல்லப்போனால் சிறை தான் பல வரலாறுகளை உருவாக்கியது .சுதந்திரம் என்பது என்ன என்பதை சிறைக்கு ஒரு முறை சென்று வந்தால் தெரியும் . இந்த உலகில் இருந்து நீங்கள் அந்நியப்பட்டு ,கட்டுப்பாடுக்குள் வாழும் ஒரு உலகம் .நாம் அநேகமாக ஒரே செயலை திருப்பி திருப்பி செய்வதில்லை.காரணம் உளவியல்ரீதியாக நமக்கு ஒரு சோர்வு தட்டிவிடும் . ஆனால் ஆயுள் முழுதும் ஒரே நடைமுறையை பின்பற்ற வேண்டுமென்றால் அதற்க்கு அசாத்திய மனதிடம் வேண்டும் . மனைவியையும் அவளின் காதலனையும் கொலை செய்துவிட்டு ஆயுள் தண்டனை அனுபவிக்கும் நாயகன் பற்றிய கதை .ஆயுள் தண்டனை கைதி  ஒருவன் சிறையிலிருந்து விடுதலை குறித்து யோசிப்பது எல்லாம் கனவிலும் நிறைவேறாத காரியம் .அதுவும் தப்பிப்பது குறித்து யோசிக்க கூட முடியாத

சுவாரசிய சினிமா - 21 GRAMMES

Image
நாம் சிலரை பார்த்தாலே பரவசம் அடைவோம் .அவர்கள் பேசுவது அத்தனை சுவாரசியாமாக இருக்கும் .மிக சாதாரண விஷயத்தை கூட அவர் சொல்லும் பொழுது மிக பிரமாதமாக இருக்கும் .பேச்சின் ஏற்ற இறக்கம் ,கூட நாலு வார்த்தை போட்டு பேசுவது ,என அவரின் பேச்சை கொண்டாடுவோம் .சரியாக சரியான நேரத்தில் ,சரியான விஷயத்தை பேசுவது பெரிய கலை .அது அனைவருக்கும் கைக் கூடாது .மிக சிலருக்கே அத்தைகைய கலை கைக்கூடும் . திரைக்கதையும் ஏறக்குறைய பேச்சு கலைக்கு சரி நிகரானதே .ஒரு சாதாரண சம்பவத்தை கூட ஈர்க்க வைக்ககூடிய சக்தி திரைக்கதை அமைப்புக்கு உண்டு .என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்பதை விட யார் சொல்கிறார்கள் என்பதையே மக்கள் விரும்புவர் .அதை போலவே என்ன சொல்ல வந்தோம் என்பதை எல்லாம் மறந்து எப்படி சொல்லி இருக்கிறோம் என்பதையே மக்கள் கவனிக்கிறார்கள் . திரைக்கதை  கேள்வி பதில் போன்றதே .ஒன்று  கேள்விக்கு நீங்கள் கட்டாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும்  .அல்லது பதிலுக்கான கேள்வியை சொல்ல வேண்டும் .எதிர்வினை நடந்து இருந்தால் நிச்சயம் வினை நடந்து இருக்கும் .அந்த வினையை நீங்கள் விளக்க வேண்டும் .அப்பொழுது தான் சம்பவம் முற்று பெரும் . இது

கதையை எளிதாக்குங்கள் - கதாபாத்திரத்தை வலுவாக்குங்கள் .

Image
ஹிட்ச்காக் ஒருவிழாவில் இப்படி சொன்னார் "ஒருவேளை நான் திரைப்பட கல்லூரி நடத்தினால் எந்த மாணவனையும் கேமரா அருகே இரண்டு ஆண்டுகள் அனுமதிக்கவே மாட்டேன் என்று ". ஏனென்றால் ஒவ்வொரு திரைப்படமும் ஒரு வாழ்வியல் பயணம் .அங்கு உலாவும் மனிதர்கள் உங்களுக்குள் ஊடுருவி உங்கள் உணர்வுகளை அசைக்க போகிறவர்கள் .அவர்களை பற்றி முழுமையாக அறியாமல் நாம் என்ன திரைப்படம் எடுக்க முடியும் ? அதோடு மட்டும் அல்லாமல் ஒவ்வொரு திரைப்படமும் காலத்தின் ,கலாச்சாரத்தின் வெளிப்பாடு .நாம் எடுக்கும் திரைப்படம் அத்தனையும் சம காலத்தின் பதிவுகள் .ஐம்பது ஆண்டு கழித்து வரும் தலைமுறையினர் பார்க்கும் பொழுது நாம் வாழ்வியலை அவர்கள் தெரிந்து கொள்வார்கள் . நன்றாக கவனித்து பாருங்கள் ஆரம்பகால சினிமாவில் மிகைபடுத்தப்பட்ட நடிப்பு இருக்கும் .காரணம் ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் நாடக கொட்டகையில் கடைசி நபர்வரை உணர்வு போய் சேர வேண்டும் .அதனால் ஓங்கி பேச வேண்டிய நிர்பந்தம் வந்தது . அதன் பின் நாடக நடிகர்களே திரைக்கு வந்ததால் அதுவே தொடர்ச்சியாக நீடித்தது .பின் வந்த இயக்குனர்கள் தான், திரைமொழி வேறு நாடக மொழி வேறு என்பதை புரிந்துக

முதல் வரி முதல் முழுக்கதை வரை !

Image
காரல் மார்க்சின் கூற்றுப்படி "தேவையே உற்பத்தியின் தாய் ".மனித குலம் தோன்றிய நாட்தொடங்கி இன்றுவரை ஒவ்வொரு உற்பத்தியும் தேவையின் அடிப்படையிலேயே உருவாக்கப்படுகிறது. அந்த உற்பத்தி தேவையை நிறைவு செய்யும் . தேவை முழுமையடையும் பொழுது உற்பத்தி தானாக நின்று விடும். நம்மிடம் பேசும் பலருக்கும் புரியாத விஷயம் எப்படி ஒரு முழு நீள திரைக்கதையை உருவாக்குவது ? 50 விதமான ஒன் லைன் இருக்கிறது ,ஆனால் முழுக் கதையாக எப்படி மாற்றுவது என்று தெரியவில்லை .கதை  எதோ ஒரு இடத்தில் நகராமல் நிற்கிறது இப்படி சிலர் .இன்னும் பலருக்கு எழுத வேண்டும் என்ற எண்ணம் அதிகம் இருக்கும் .ஆனால் எதைப் பற்றி எழுதுவது என்று தெரியாமல் விழிப்போம் . விவாதம் ,தொடர் உரையாடல் ,பல படங்களின் மேற்கோள் ,என அனைத்தும் இருந்தும் ஒரே ஒரு காட்சியை கூட முழுமையாக எழுத முடியாமல் தவிப்போம் .உங்கள் வேகம் ஒரே நொடியில் பூஜ்ஜியத்திற்கு வந்து விடும் . சரி முன்னர் சொன்னது போல் உங்கள் கதையின் தேவை என்ன என்று சிந்தியுங்கள் .உற்பத்தி தானாக பெருகும் .ஆம் ஒரு கரு உங்களுக்குள் உருவாகி இருக்கும் ,அது முழுமை பெற வேண்டும் என்றால் அந்த கருவின் தேவை