Posts

Showing posts from August, 2017

இசையின் கடவுள் ராஜா .!

Image
ஒரு திரைப்படத்தின் 40 சதவிகித பணியை இசையே நிறைவேற்றும் .வார்த்தைகளால் நிரப்ப முடியாத உணர்வுகளை இசை நிரப்பும் .மொழி அறியாது ,இனம் அறியாது ஆனாலும் உங்களை வசிய செய்யும் ஆற்றல் இசைக்கு உண்டு . சென்னையில் இருந்து கோவை பயணம் .பேருந்தில்  அருகில் அமர்ந்தவர் அறுபது வயது இருக்கலாம் .ஏறி  அமர்ந்த நொடி  காதில் earphone -ஐ மாட்டிக்கொண்டார் .பேருந்து செங்கல்பட்டை தாண்டுவதற்குள் கண்ணில் வழியும் நீரை, குறைந்தது இருபது முறையாவது துடைத்துக் கொண்டார் . பொறுக்கமாட்டாமல் என்ன பிரச்சனை என்று கேட்டே விட்டேன் .சிறு பிள்ளையை போல் அழ தொடங்கி விட்டார் .மூடு பனி வந்த சமயத்துல கல்யாணம் ஆச்சு தம்பி .என் பொண்டாடிக்கு ராஜா பாட்டுன அவ்ளோ பிடிக்கும் .என் இனிய பொன் நிலவே எங்க பாடுனாலும் நின்னு கேட்டுட்டு வருவா .சில சமயம் என்னையும் பாட சொல்லுவா . " பன்னீரைத் தூவும் மழை ஜில்லேன்ற காற்றின் அலை சேர்ந்தாடும் இன்னேரமே என் நெஞ்சில் என்னென்னவோ எண்ணங்கள் ஆடும் நிலை என் ஆசை உன்னொரமே" இந்த வரி பாடி முடிக்கும் போது என்ன பார்த்து ஒரு சிரிப்பு சிரிப்பா தம்பி .என் உயிர் என் கைல இருக்காது .செத்து 2

சுவாரசிய சினிமா - Parched ( HINDI )

Image
இந்த படத்தை குறித்து பேசும் முன் நம் இந்திய சமுகத்தில் பெண்களுக்கான வெளியை குறித்து முதலில் பேச வேண்டியதுள்ளது .இந்தியா  மொழியாலும் ,இனத்தாலும் பல சமுக மக்களை உள்ளடக்கிய நாடு .உலகிலேயே அதிக அளவில் பெண் கடவுள் உள்ள தேசம் .அதற்க்கு சற்றும் குறையாமல் பாலியல் வன்கொடுமை ,பெண்களுக்கு எதிரான ஆணாதிக்க மனோபாவம் ,கல்வியில் கட்டுப்பாடு ,மறுக்கப்படும் அடிப்படை  உரிமைகள் இப்படி அடக்கிக் கொண்டே போகும் அளவுக்கு பிரச்சனை உள்ள தேசமும் கூட . நீங்கள் சொல்வது எல்லாம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் இப்பொழுது எல்லாம் அப்படி கிடையாது என்று சொல்ல உங்கள் நா துடிக்கும் .அப்படி துடித்தால் நிச்சயம் நீங்கள் கிராமப்புற இந்தியாவை இன்னும் பார்க்கவில்லை என்று அர்த்தம் கொள்க .அடிப்படை சுகாதாரம் ,சாலை வசதி ,ஒருவேளை உண்பதே பெரும் பாடாய் உள்ள கிராமங்கள் இந்தியாவில் இலட்சக்கணக்கில் உள்ளது .பின் பெண் விடுதலை குறித்து எங்கே பேசுவது ? அடுத்து ஆண்களின் பார்வையில் பெண் என்பவள் ,இன்னமும் தனக்கு கீழே தான் ,என்ற மனோபாவம் கொஞ்சமும் மாறவில்லை .பெண் எத்தனை உயர் பதவியை அடைந்தாலும் அவள் கணவனுக்கும் ,குடும்பத்துக்கும் கட்டு

சிறந்த கதை கிடைக்க சமூகத்திடம் கையேந்துங்கள் !

Image
நம் தினமும் சந்திக்கும் சமுகத்தை வெகு இயல்பாய் கடந்து விடுகிறோம் .ஒவ்வொரு தனி மனிதனுக்கு பின்னும் ஒரு சமுக நெருக்கடி தொடர்ந்து வந்துக் கொண்டே இருக்கும் .எந்த தனி மனிதனின் வாழ்வியல் குறித்தும், நாம் சிந்திப்பது இல்லை .பின் கதை எங்கே தோன்றும் ? திரைக்கு எழுதுவது பெரும்பாலும் கற்பனையான உலகமாக இருந்தாலும்கூட ,நாம் வாழும் சமுகத்தில் இருந்தே அதை பெற முடியும் .Fantasy வகை கதைகளில் கூட மனித உணர்வே பிரதானமாக இருக்கும் .உங்கள்  உணர்வுகளை  சீண்டி பார்க்கும் பொழுதே அந்த படைப்பு வெற்றி அடைகிறது . அப்படி உணர்வுபெறும் வகையில் கதாப்பாத்திரங்களை பெற நீங்கள் சமூகத்தையே சார்ந்து இருக்க வேண்டும் .இதுவரை வெளிவந்த அத்தனை சிறந்த படைப்பும் ,நீங்கள் கவனிக்க தவறிய சமுகத்தின் வெளிப்பாடே .நாம் நம் உலகை தவிர  வேறு ஒரு உலகம் இருப்பதை மறந்து வாழ்கிறோம் . ஒரு சிறந்த படைப்பு  எளிய மனிதனின் வாழ்வை பிரதிபலிக்கும் பொழுதே முழுமை அடைகிறது .ஏனென்றால் 100க்கு 90 சதவிகிதம் எளிய மனிதர்களால் நிரம்பியது இந்த உலகு .ஒரு எளியவன் வலியவன் ஆகுவதையே நாம் பெரிதும் விரும்புகிறோம் .காரணம் நாம் அனைவரும் எளியவர்களே .

நரி சுட்ட வடை - NON LINEAR

Image
திரைக்கதை குறித்து கேள்வி வரும்பொழுது எல்லாம் என்னிடம் அதிகம் முன் வைக்கும் கேள்விகள் Linear -Non Linear சம்மந்தப்பட்டதாக கேட்கப்படும் .ஒவ்வொரு திரைப்படமும் தனக்னே தனி அடையாளயத்தை கொண்டு வெளிவரும்போது மக்களின் கவனத்தை ஈர்க்கிறது .தனி அடையாளம் என்பது கதை ,களம் ,நடிகர்கள் ,காட்சிப்படுத்திய விதம் என அனைத்திலும் சிறந்த கோணத்தை வெளிப்படுத்துவது . சரி இப்பொழுது வேறு விதமாக என்றால் எப்படி ?காட்சிக்கு காட்சி வித்தியாசம் காட்ட வேண்டுமா ?புதுமையை புகுத்த வேண்டுமா ?பார்வையாளரை மிரள வைக்க வேண்டுமா ?இப்படியெல்லாம் நீங்கள் சிந்தித்தால் மக்களிடம் இருந்து தூர போய் விடுவீர்கள் .மக்கள் புதிய சிந்தனயை வரவேற்பவர்கள் தான் .ஆனால் கொஞ்சம் அவர்களின் வாழ்வியலோடு தொடர்ப்புடையதாக இருக்க வேண்டும் . அடுத்து நீங்கள் சிறந்த கதை சொல்லியாக இருப்பது மிகவும் அவசியம் .சினிமா முழுக்க முழுக்க சித்தரிக்கப்பட்டவை தான் ஆனால் ஒலி -ஒளியுடன் பார்க்கும் பொழுது மூளை நிஜமாக நடக்கிறது என எண்ணிக் கொண்டு உணர்வுகளை வெளிப்படுத்த தொடங்கி விடும் .அங்கு நடப்பது பொய் என்று மூளை சுதாரித்து கொண்டால் நீங்கள் மூளை நம்பும்படியாக கதை சொல